மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நேரடி சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜெயசுதா மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளனர். அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனாலும் கங்கனா 10 படங்களுக்குள் மட்டுமே நடித்து இந்த விருதை பெற்று இருக்கிறார். ஆனால் என்னை போன்ற பலர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறோம்.
40 படங்களுக்கு மேல் இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை. தென்னிந்திய நடிகைகளை அரசு அங்கீகரிக்காமல் அரசு புறக்கணித்து வருவது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஜெயசுதா கூறியுள்ளார்.
தமிழில் 1970களில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.