ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை விழாவிற்கு மாவட்ட வாரியாக விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். என்றாலும் நுழைவுச்சீட்டு இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் முன்பு கூடினார்கள்.
அதையடுத்து நுழைவு வாயில் கதவுகள் திறக்கப்பட்ட போது போலீசார் நுழைவு சீட்டை ரசிகர்களிடத்தில் கேட்டார்கள். அப்போது நுழைவுச்சீட்டு இல்லாத ரசிகர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டுவிட்டு அரங்கத்திற்குள் ஓடினார்கள். இந்த தள்ளு முள்ளுவில் சில ரசிகர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று வாரிசு இசைவிழா நடப்பதற்கு முன்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விஜய் மக்கள் மன்றத்திலிருந்து ரசிகர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் பல ரசிகர்கள் அந்த பாஸை 4000 முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.