மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கானுடன் இணைந்து ஒன்றாக சுற்றி வந்ததால் பரபரப்பாக பேசப்பட்டவர். அதைத்தொடர்ந்து சமீபகாலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுகேஷிடம் இருந்து கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசுப்பொருட்களை பெற்றுள்ளதாக அவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பஹ்ரைனுக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸ், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இந்த மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இந்த மனுவின் மீது நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஜாக்குலின் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் ஊர் சென்றால் இங்கே திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.