இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானவர் அழகப்பன். தொடர்ந்து 'ஆபிஸ்' 'மாப்பிள்ளை', 'ரெட்டை வால் குருவி', 'தலையனை பூக்கள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவில் 'விதி மதி உல்ட்டா', 'நண்பர்கள் கவனத்திற்கு', 'வெயிலோடு விளையாடு' ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் அல்லது காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் தற்போது 'ஆனந்தராகம்' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களிடத்திலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆனந்த ராகம் தொடர் 100 வது எபிசோடை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அழகப்பன் தனது வெளியிட்டுள்ள பதிவில், '100 வெறும் நம்பர் தான். ஆனால் ஹீரோவாக எனக்கு இது 100வது எபிசோடு. என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கும் பாராட்டியதற்கும் நன்றி. இந்த தருணத்தில் நான் எனது சக நடிகர்களுக்கும் எனது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய வெற்றியை எனக்களித்த மக்களுக்கும் மிகவும் நன்றி. இதேபோல் 1000, 2000 எபிசோடுகளை கொண்டாடவும் ஆசைபடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அழகப்பனின் இந்த பதிவிற்கு சீரியல் ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
--