உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
இந்தியாவில் பைக் சுற்றுப் பயணத்தை முடித்துள்ள அஜித் அடுத்து உலக பயணத்தை தொடர இருக்கிறார். இந்த நிலையில் இந்திய சுற்று பயணத்தில் அவருடன் இருந்த நண்பர் உதயகுமார், அஜித்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது சமூகவலைதளத்தில் எழுதியிருப்பதாவது:
எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்று அஜித்திடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு குட்டி கதையை பதிலாக சொன்னார்.
இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதை நிறுத்துமாறு கசாப்புக் கடைக்காரரிடம் கோரிக்கை வைப்பதைப் போன்றது. அப்படி அவரிடம் சொன்னால், அவர், அசைவைப் பிரியர்களும் இங்கே இருக்கிறார்கள், அதற்கு சந்தை இருக்கிறது என்று நிச்சயமாகப் பதிலளிப்பார்.
அப்படி அவர் அதை செய்யாமல் விட்டுவிட்டால், நிச்சயம் வேறு யாராவது ஒருவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவ்வாறு செய்வார். அதேபோல் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்தகைய ட்ரோல்களையும், எதிர்மறை விமர்சனங்களையும் விரும்புகிறார்கள். மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்காத வரையில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். என்று கூறினார்.
இவ்வாறு உதயகுமார் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.