22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பூவே பூச்சூடவா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் எஸ் .வி .சேகர். அதன் பிறகு காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதோடு அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும் சில சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார் எஸ்.வி.சேகர். இப்படியொரு நிலைகள் தற்போது எஸ்.சி.சேகர், வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலருக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதாவது உடல் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக பலரும் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோல் தான் எஸ்.வி. சேகரும் சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்துள்ளார் எஸ்.வி.சேகர். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒரு பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவு தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்து வரும் நபர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.