22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான தெலுங்கு படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'உலகமகன்க் என்ற தனது கதையை திருடி உப்பெனா படம் எடுக்கபட்டிருப்பதாக அவர் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் நீதிபதியிடம், விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிமன்றம் விஜய்சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உப்பென்னா பட தயாரிப்பாளர், இயக்குனர் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.