ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான தெலுங்கு படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'உலகமகன்க் என்ற தனது கதையை திருடி உப்பெனா படம் எடுக்கபட்டிருப்பதாக அவர் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் நீதிபதியிடம், விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிமன்றம் விஜய்சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உப்பென்னா பட தயாரிப்பாளர், இயக்குனர் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.