ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதனால் பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
காவி நிறம், துறவு, தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சின்னமாகும். அதனை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென வி.எச்.பி. தலைவர் டாக்டர் பிராச்சி சாத்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபூரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் சுகுமார் என்பவர் படத்தை தயாரித்த ஆதித்ய சோப்ரா, நடித்த ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலில் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ஆபாசத்தை பரப்பியதாவும் அவர் குற்றம்சாட்டி உள்ளர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட முசாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விசாரணை வருகிற ஜனவரி 3ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.