நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதோடு உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து இந்திய படங்கள் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவது ஏன் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: பாலிவுட் சினிமாவுக்குள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்ததும், நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக சம்பளம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற பசி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன. ஆனால் முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின.
பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு இயங்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையென்றால் மூழ்கிவிடுவார்கள்.
ராஜமவுலியன் இந்த வெளிப்படையான கருத்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.