100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரில் இரண்டு போதை பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் அப்போது பல சினிமா பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு இப்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தெலுங்கானா சட்டசபை உறுப்பினர் பைலட் ரோகித் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போதை கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங்கை இணைத்து செய்திகள் வந்தபோது கடுமையாக கோபம் அடைந்தார் என்பதும், என்னை பற்றி அவதூறு பரப்பும் மீடியாக்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று அப்போது அவர் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.