மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரில் இரண்டு போதை பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் அப்போது பல சினிமா பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு இப்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தெலுங்கானா சட்டசபை உறுப்பினர் பைலட் ரோகித் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போதை கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங்கை இணைத்து செய்திகள் வந்தபோது கடுமையாக கோபம் அடைந்தார் என்பதும், என்னை பற்றி அவதூறு பரப்பும் மீடியாக்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று அப்போது அவர் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.