மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சினிமா நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். எமோஷ்னல், பிளாக்மெயில், எதார்த்தமான நடிப்பு என தந்திரமான வில்லனாக வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்து வருகிறார். அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக செய்துவிட முடியாது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது சகோதர சகோதரிகளை செண்டிமெண்ட்டால் எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்யும் மகாநடிகன் குணசேகரனுக்கு நிஜ வாழ்வில் அழவே தெரியாதாம். இதுகுறித்து மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறிய போது, 'என் அப்பா செத்தப்ப கூட மனசுல வருத்தம் இருந்துச்சு. ஆனா அவர் அவரோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிட்டாரு. எல்லோரும் ஒருநாள் போகத்தான் போறோம்ங்கிற உண்மைய நிலைய புரிஞ்சிக்கிட்டவன் நான். அதனால் எதுக்குமே அழுகுறதே இல்லை. சீரியல்ல கூட க்ளிசரினை ஊத்தித்தான் அழுகுறேன்' என கூறியுள்ளார்.