இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் | 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை | விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி | 3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு | தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் |
முன்னணி நடிகை பாவனா தனது சொந்த வாழ்வில் நடந்த சில சோகமான பிரச்சினைகள் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு'. படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் தொடர்பான ஒரு நேர்காணனில் சைபர் க்ரைம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். சினிமாதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தது. மீண்டும் சினிமாவுக்கு வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். என் நட்புகள் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றன.
எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இணையதளம் மூலம் பிறரை மிரட்டுவது, புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது இன்று தொழிலாகி விட்டது. வேலைக்கு ஆட்களை அமர்த்தி இதை செய்கிறார்கள். இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று அதற்காகப் பணம் செலவழித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்தவர்களே, எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை.
இவ்வாறு பாவனா கூறியுள்ளார்.