நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராம், ஆயிஷா, ஜனனி, அசீம், கதிர், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமையன்றே எலிமினேட் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராம் மற்றும் ஆயிஷா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமின் எவிக்சனை கூட மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் ஆரம்பம் முதலே ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், ஆயிஷா சமீபத்திய எபிசோடுகளில் நன்றாக தான் விளையாடினார். மேலும், ஜனனி போன்ற ஆயிஷாவையும் விட குறைவான பெர்பாமன்ஸ் உள்ள நபர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். எனவே, இது உண்மையில் மக்களின் தீர்ப்பல்ல. பிக்பாஸின் தன்னிச்சையான முடிவு என பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.