ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து இரண்டு பாகங்களாக வெளிவந்த தெலுங்கு, தமிழ்ப் படம் 'பாகுபலி'. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், பெரும் வசூலும்தான் 'பான் இந்தியா வெளியீடு' என டிரெண்டை புதிதாக ஆரம்பித்து வைத்தது.
அதற்குப் பிறகு தெலுங்கிலிருந்தும், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்தும் சில பல பான் இந்தியா படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தில் மட்டும் பான் இந்தியா படமாக வெளியான தமிழ்ப் படமான 'பொன்னியின் செல்வன்', தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்', கன்னடப் படங்களான 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய படங்கள் மட்டுமே சுமார் 3000 கோடி வசூலைப் பெற்றிருக்கின்றன.
அடுத்த வருடத்திலும் தென்னிந்திய மொழிகளிலிருந்து பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் தெலுங்கிலிருந்து மட்டுமே சுமார் 10 பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ், சலார்', பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரிஹர வீர மல்லு', ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம், என்டிஆர் நடிப்பில் கொராட்டலா சிவா இயக்கும் படம், அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' இரண்டாம் பாகம், பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கும் படம், நானி நடிக்கும் 'தசரா', அகில் நடிக்கும் 'ஏஜென்ட்', பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு மான்' என இந்த 10 படங்களையும் பான் இந்தியா வெளியீடாக வெளியிட உள்ளார்கள்.