ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராட்சசன் படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடித்தவர் சரவணன். அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹீரோவாகி இருக்கிறார். குற்றப்பின்னணி என்ற படத்தில் ஹீரோவாகும் அவருக்கு தீபாளி, தாட்சாயிணி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளார். சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் இஸ்மாயில் கூறியதாவது: தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும், பார்த்தும் திகைக்கக்கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே குற்றப்பின்னணி. என்கிறார்.