மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
ராட்சசன் படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடித்தவர் சரவணன். அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹீரோவாகி இருக்கிறார். குற்றப்பின்னணி என்ற படத்தில் ஹீரோவாகும் அவருக்கு தீபாளி, தாட்சாயிணி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளார். சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் இஸ்மாயில் கூறியதாவது: தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும், பார்த்தும் திகைக்கக்கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே குற்றப்பின்னணி. என்கிறார்.