திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். ஹாலிவுட் வரை சென்றவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றார். சினிமாவில் நடிகைகளுக்கு சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார் பிரியங்கா.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛எனது நிறத்தை வைத்து என்னை ‛கருப்பு பூனை' என கிண்டல் செய்தனர். சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன். நான் மட்டுமல்லாது பல நடிகைகளுக்கு இது இன்னமும் தொடர்கிறது. மேலும் படப்பிடிப்பில் நடிகைகள் நீண்டநேரம் காத்திருக்கணும், நடிகர்களுக்கு அப்படி இல்லை, நேரத்திற்கு வந்து செல்வர். ஹாலிவுட்டிலும் இந்த நிலை உள்ளது'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.