திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பரத் தற்போது நடித்து முடித்துள்ள ‛லவ்' அவருக்கு 50வது படம். இந்த படத்தை ஆர்.பி.பாலா என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். வாணிபோஜன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார்.
தனது 50வது படம் குறித்து பரத் கூறியிருப்பதாவது: எல்லா மொழிகளிலும், எல்லா படத்தையும் கணக்கிடும்போது இது எனக்கு 50 படம் என்பதில் மகிழ்ச்சி. நான் காதல் படத்தின் மூலம்தான் ஹீரோவானேன். எனது 50வது படம் அதே டைட்டிலுடன் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சி. சினிமாவுக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிறது. முதல் படம் தொடங்கி இப்போது வரை எந்த பின்புலமும் இல்லாமல் நான் தனித்தே பயணம் செய்திருக்கிறேன். அதில் வெற்றியையும், தோல்வியையும் சந்தித்திருக்கிறேன். இரண்டையும் சமமாக கருதுவதால் நிதானமாக பயணிக்க முடிகிறது. அடுத்து முன்னறிவான் என்ற படத்திலும் வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன்.
லவ் படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும். என்றார்.