நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கான தேர்வும் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 9 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 17 பேர் போட்டியாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதில் சினேகா, ப்ரியா என்ற இரட்டை சகோதரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வானது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சினேகா, ப்ரியாவை விட திறமையான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதாகவும் ஆனால், டிஆர்பிக்காக விஜய் டிவி இரட்டையர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரவலாக சோஷியல் மீடியாவி பேசப்பட்டு வருகிறது. எனினும், சிலருக்கு இரட்டையர்களின் என்ட்ரி ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் ஏற்கனவே பின்னணி பாடகர்களாவும் இருப்பதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 9 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.