திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பார்வதி நாயர். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது வீட்டில் பணியாற்றிய சந்திரபோஸ் தனது வீட்டில் இருந்த 6 லட்சம் ரொக்கம், 3 லட்சம் மதிப்புள்ள வாட்ச் 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாக் ஆகியவற்றை திருடி விட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ், பார்வதி நாயரின் சில தனிப்பட்ட நடவடிக்கைகள் நான் பார்த்து விட்டதால் அதுபற்றி வெளியில் சொல்லிவிடுவேன் என்று பயந்து என்மீது பொய் புகார் அளித்துள்ளார். என்னை அடித்து துன்புறுத்தினார், என்று அவரும் புகார் அளித்தார். தற்போது இரு புகார்களையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பார்வதி நாயர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யு-டியூப் சேனல்களில், தான் வீட்டில் ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததாகவும், அதை அவர் பார்த்ததால் அவர் மீது நான் திருட்டு பட்டம் கட்டியதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இதனால் நான் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன். நடக்காத சம்பவத்தை நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை கூறி வரும் சுபாஷ் சந்திர போஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.