படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
15வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிட சீனு ராமசாமியின் 'மாமனிதன்', கார்த்திக் சுவாமிநாதனின் 'முகிழ்', ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் 'இரவின் நிழல்', கவுதம் ராமச்சந்திரனின் 'கார்கி', மற்றும் எம் பத்மகுமாரின் 'விசித்திரன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
இதை தவிர சஞ்சீவ் ஹசாரிகா இயக்கத்தில் ரினிகி புயன் சர்மா தயாரித்த அசாமிய திரைப்படமான 'போகுல் புலோர் டோரே', சிதம்பர பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'தி ஒன் அண்ட் தி மெனி வித்தின்', சௌம்யாஜித் மஜும்தாரின் பெங்காலி படம் 'ஹோம்கமிங்', கிரீஷ் மோஹிதேவின் மராத்தி படம் 'தாத் கானா', ஜோஷி மேத்யூவின் 'நெஸ்ட் ஆஃப் சோரோஸ்' மலையாளப் படம், ஷெர்ரி மற்றும் தீபேஷ் டியின் மலையாளப் படம் 'அவனோவிலோனா' மற்றும் இஷான் கோஸின் பெங்காலி படம் 'ஜில்லி' ஆகியவையும் திரையிடப்படுகிறது.
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரச்சார சுடர் நிகழ்ச்சி நடந்தது. அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பார்த்திபன், சீனு ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.