நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் வீட்டில் தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டி வரும் அசீம், இந்த வாரம் அத்துமீறி அமுதவாணனை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் இருவருக்குமிடையே பெரிய அளவில் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து பேசிய அசீம் 'நெஞ்சில உரம் இருந்தா என்ன அடிடா' என ஆவேசமாக பேசி கத்தினார். அசீமின் இந்த செயலை பலரும் தற்போது கண்டித்து வருவதுடன், அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், கேமரா முன் பேசிய அசீம் 'நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகனும். வீடே எனக்கு எதிரா இருக்கும் போது தொடர்ந்து இந்த விளையாட்ட விளையாட நான் விரும்பல' என கூறியுள்ளார். மேலும், அமுதவாணனை அடித்தது குறித்து பேசிய அசீம் 'அந்த சண்டை கோபத்தால நடந்தது. அதை தயவு செஞ்சு டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க ப்ளீஸ். அது டெலிகாஸ்ட் ஆச்சுனா ரொம்ப பெரிய விஷயமா மாறிடும். என்னோட பெயர் கெட்டு போய்டும்' என பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.