நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் சுமார் ரூ.300 கோடி வரை வசூலித்தது.
அப்படத்தைத் தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். இன்றும், நாளையும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் படத்திற்கான பிரிமீயர் காட்சிகள் நடைபெற உள்ளன.
இதற்காக புஷ்பா படக்குழுவினர் ரஷியா சென்றுள்ளனர். அங்கு நேற்றே தங்களது பிரமோஷன் பேட்டிகளை ஆரம்பித்துவிட்டனர். இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் அதில் கலந்து கொண்டனர்.