நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் பிரபாஸ் தன்னுடன் பழகும் நட்சத்திரங்களுக்கு எவ்வாறு விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் பேட்டியில் கூறியுள்ளனர். இப்போது நடிகர் சூர்யாவின் முறை. ஆம் ஐதராபாத்தில் பிரபாஸ் நள்ளிரவு வரை காத்திருந்து தனக்கு விருந்தளித்த அந்த இன்ப அதிர்ச்சியான நிகழ்வு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சில நாட்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படமும் பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிராஜக்ட் கே படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் அருகருகேதான் நடைபெற்று வந்தன. அப்போது சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினம் இரவு விருந்துக்கு வருமாறு அழைத்திருந்தார். சூர்யாவும் வருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் மாலை 6 மணிக்கு துவங்க வேண்டிய படப்பிடிப்புக்கு தாமதமாக துவங்கி, படப்பிடிப்பு முடியவே இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகி விட்டதாம்.
இனிமேல் விருந்துக்கு செல்வது எப்படி என்று யோசித்த சூர்யா, தன்னை ஹோட்டலுக்குத்தானே பிரபாஸ் வரச்சொல்லியிருக்கிறார், எப்படியும் ஹோட்டல் உணவு தானே சாப்பிட போகிறோம், அதனால் இன்னொரு நாள் அவருடன் சாவகாசமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து, அதை அவரிடம் நேரிலேயே சொல்லி விடலாம் என அந்த ஹோட்டலுக்கே சென்றுள்ளார்.
ஆனால் சூர்யா வரும் வரை சாப்பிடாமல் காத்திருந்த பிரபாஸ் அங்கே சூர்யாவுக்காக ஸ்பெஷலாக தனது வீட்டிலிருந்து தனது அம்மாவின் கைப்பக்குவத்தில் சுவையான பிரியாணியை செய்து கொண்டு வந்திருந்தாராம். அந்த நேரத்திலும் அவரை அமர வைத்து பிரியாணி பரிமாற அப்படி ஒரு சுவையான பிரியாணியை தான் சாப்பிட்டதே இல்லை” என்று வியந்துபோய் அந்த பேட்டியில் கூறியுள்ளார் சூர்யா.