நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சினிமா பிரபலங்களுக்கு வளர்ப்புப் பிராணிகள் மீது எப்போதுமே கொள்ளைப் பிரியம் இருக்கும். அதிலும் பல நடிகைகள் நாய்களை வளர்ப்பதில் தனி ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் பூனைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது செல்ல நாய்க்குட்டியான 'நைக்' உடன் நாகர்கோவிலில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்திருக்கிறார். “இன்னும் அறிவிக்கப்படாத ஒரு படத்திற்காக, அதிக மகிழ்ச்சி, நினைவுகள் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில் ஒரு வாரம்” எனப் பதிவிட்டு தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள், நாயுடன் விளையாடி மகிழும் வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி அருகில் உள்ள திருக்குறுங்குடி கிராமத்தில் அவர்களது பூர்வீக வீட்டிற்குச் சென்றது, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டது பற்றி கீர்த்தி பதிவிட்டிருந்தார். கீர்த்தியின் அம்மா நடிகை மேனகா நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்டவர்.