நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அந்தஸ்தைப் பெற்றார். தற்போது 'ஆதி புருஷ், புராஜக்ட் கே, பெயரிடப்படாத ஒரு படம்' என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவரும், பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'ஆதி புருஷ்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
வருண் தவான், கிர்த்தி சனோன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பேடியா' படத்தின் பிரமோஷனுக்காக கரண் ஜோஹரின் 'ஜலக் திக்லா ஜா' நிகழ்ச்சியில் வருண் மற்றும் கிர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வருணிடம் “பாலிவுட்டில் சிங்கிள் ஆக இருக்கும் நடிகைகள் யார் யார் ?,” என கரண் ஜோஹர் கேட்டார். அவர் சொன்ன பட்டியலில் கிர்த்தி சனோன் இடம் பெறவில்லை. ஏன் அவர் பெயரைச் சொல்லவில்லை என கரண் வருணிடம் கேட்டதற்கு, “கிர்த்தியின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை, ஏனென்றால் அவர் வேறொருவரின் இதயத்தில் இருக்கிறார். அவந்த மனிதர் தற்போது மும்பையில் இல்லை, தீபிகா படுகோனேவுடன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்,” என்று பதிலளித்தார். பிரபாஸ் தற்போது தீபிகாவுடன் புராஜக்ட் கே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதன் மூலம் பிரபாஸ், கிர்த்தி சனோனன் இருவரும் காதலில் இருப்பதை சக நடிகரான வருண் தவான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்களும் கருதுகிறார்கள்.