விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அந்தஸ்தைப் பெற்றார். தற்போது 'ஆதி புருஷ், புராஜக்ட் கே, பெயரிடப்படாத ஒரு படம்' என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவரும், பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'ஆதி புருஷ்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
வருண் தவான், கிர்த்தி சனோன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பேடியா' படத்தின் பிரமோஷனுக்காக கரண் ஜோஹரின் 'ஜலக் திக்லா ஜா' நிகழ்ச்சியில் வருண் மற்றும் கிர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வருணிடம் “பாலிவுட்டில் சிங்கிள் ஆக இருக்கும் நடிகைகள் யார் யார் ?,” என கரண் ஜோஹர் கேட்டார். அவர் சொன்ன பட்டியலில் கிர்த்தி சனோன் இடம் பெறவில்லை. ஏன் அவர் பெயரைச் சொல்லவில்லை என கரண் வருணிடம் கேட்டதற்கு, “கிர்த்தியின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை, ஏனென்றால் அவர் வேறொருவரின் இதயத்தில் இருக்கிறார். அவந்த மனிதர் தற்போது மும்பையில் இல்லை, தீபிகா படுகோனேவுடன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்,” என்று பதிலளித்தார். பிரபாஸ் தற்போது தீபிகாவுடன் புராஜக்ட் கே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதன் மூலம் பிரபாஸ், கிர்த்தி சனோனன் இருவரும் காதலில் இருப்பதை சக நடிகரான வருண் தவான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்களும் கருதுகிறார்கள்.