நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளிலிருந்து தன்னைத்தானே பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் வகையில் தற்பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டையிடுவது, கத்தி பேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என அதிகாரத்தால் மட்டுமே இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். மற்றபடி டாஸ்க்குகளில் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்வதில்லை.
அசீமை பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி 'அட்டக்கத்தி','வெறும் வாய் சவுடால்' என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் தன்னை தமிழ் பற்று மிக்கவராக காட்டிக்கொள்ளும் அசீம் அண்மையில் தப்பு தப்பாக தமிழ் எழுதி சிக்கிகொண்டார். தற்போது மீம்கிரியேட்டர்ஸ்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். உண்மையான அசீமின் குணமே இப்படித்தானா? அல்லது பொய்யாக விளையாடுகிறாரா? என ரசிகர்களே குழம்பி போய்விட்டனர்.
இந்நிலையில், அசீமின் சக நடிகரான அருண் குமார் ராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 'அசீமுடன் 'பூவே உனக்காக' தொடரில் நடித்திருக்கிறேன். அவர் உண்மையான முகமே இதுதான். பெண்களை எப்போதுமே டாமினேட் செய்வார். ஒருமுறை அந்த சீரியலில் நடித்த ஹீரோயினை தகாத வார்த்தையால் திட்டிவிட்டார். அதனால், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே அசீம் மன்னிப்பு கேட்டால் தான் வேலை செய்வோம் என்று சொல்லிவிட்டனர். தயாரிப்பாளர் வற்புறுத்தி கேட்டுகொண்டதால் மட்டுமே அசீம் அன்று மன்னிப்பு கேட்டார். சீரியலில் வரும் வசனத்தில் கூட ஒரு பெண் தன்னை 'டா' போட்டு கூப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்' என்று அதில் கூறியுள்ளார்.