திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளிலிருந்து தன்னைத்தானே பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் வகையில் தற்பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டையிடுவது, கத்தி பேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என அதிகாரத்தால் மட்டுமே இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். மற்றபடி டாஸ்க்குகளில் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்வதில்லை.
அசீமை பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி 'அட்டக்கத்தி','வெறும் வாய் சவுடால்' என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் தன்னை தமிழ் பற்று மிக்கவராக காட்டிக்கொள்ளும் அசீம் அண்மையில் தப்பு தப்பாக தமிழ் எழுதி சிக்கிகொண்டார். தற்போது மீம்கிரியேட்டர்ஸ்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். உண்மையான அசீமின் குணமே இப்படித்தானா? அல்லது பொய்யாக விளையாடுகிறாரா? என ரசிகர்களே குழம்பி போய்விட்டனர்.
இந்நிலையில், அசீமின் சக நடிகரான அருண் குமார் ராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 'அசீமுடன் 'பூவே உனக்காக' தொடரில் நடித்திருக்கிறேன். அவர் உண்மையான முகமே இதுதான். பெண்களை எப்போதுமே டாமினேட் செய்வார். ஒருமுறை அந்த சீரியலில் நடித்த ஹீரோயினை தகாத வார்த்தையால் திட்டிவிட்டார். அதனால், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே அசீம் மன்னிப்பு கேட்டால் தான் வேலை செய்வோம் என்று சொல்லிவிட்டனர். தயாரிப்பாளர் வற்புறுத்தி கேட்டுகொண்டதால் மட்டுமே அசீம் அன்று மன்னிப்பு கேட்டார். சீரியலில் வரும் வசனத்தில் கூட ஒரு பெண் தன்னை 'டா' போட்டு கூப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்' என்று அதில் கூறியுள்ளார்.