39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அப்படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள 'கோல்டு' படம் அடுத்த வாரம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
ஓணம் பண்டிகையின் போதே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தைத் தள்ளி வைத்திருந்தார்கள். நயன்தாரா தமிழில் நம்பர் 1 நடிகையாக இருப்பதால் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. கேரளாவில் கால்பந்து போட்டிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. பலரும் தற்போது உலகக் கால்பந்து போட்டிகளில் பிஸியாக இருப்பதால் மலையாள ரசிகர்கள் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.