நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்கிற திரைப்படம் வெளியானது. இதற்குமுன் கோமாளி என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்த பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களமிறங்கினார். அதற்கு கைமேல் பலனாக, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக இன்றைய காதலர்கள் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இந்தப்படத்தைப் ரசித்துப் பார்க்கும் விதமாக கொடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த படத்திற்கு இங்கே கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல்காட்சியை ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் அங்கே நின்ற மீடியாக்களிடம் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பையும் டைரக்சனையும், காதலர்கள் தங்களுடைய செல்போன்களை ஒருநாள் மற்றும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும் புதிய கான்செப்ட்டையும் உரத்த குரலில் சிலாகித்து பாராட்டி கொண்டிருந்தார்.
அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிரதீப் ரங்கநாதனை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கினார் அந்த ரசிகர். ஆந்திராவில் நமக்கு இப்படி ஒரு வரவேற்பா என பிரதீப் ரங்கநாதன் ஆச்சரியப்பட்டு போனார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.