திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்கிற திரைப்படம் வெளியானது. இதற்குமுன் கோமாளி என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்த பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களமிறங்கினார். அதற்கு கைமேல் பலனாக, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக இன்றைய காதலர்கள் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இந்தப்படத்தைப் ரசித்துப் பார்க்கும் விதமாக கொடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த படத்திற்கு இங்கே கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல்காட்சியை ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் அங்கே நின்ற மீடியாக்களிடம் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பையும் டைரக்சனையும், காதலர்கள் தங்களுடைய செல்போன்களை ஒருநாள் மற்றும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும் புதிய கான்செப்ட்டையும் உரத்த குரலில் சிலாகித்து பாராட்டி கொண்டிருந்தார்.
அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிரதீப் ரங்கநாதனை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கினார் அந்த ரசிகர். ஆந்திராவில் நமக்கு இப்படி ஒரு வரவேற்பா என பிரதீப் ரங்கநாதன் ஆச்சரியப்பட்டு போனார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.