ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடுவாலா மீது புகார் கொடுத்தார் சூரி. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் நான்காவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார் சூரி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ‛‛பலமுறை விசாரணைக்கு வந்துள்ளேன், திருப்பி திருப்பி விசாரிக்கிறார்கள். போலீஸ், நீதி துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எங்கப்பா சூட்டிங் என எனது பிள்ளைகள் கேட்பார்கள். இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு போறீங்களானு கேக்குறாங்க. கனவில் கூட போலீஸ் ஸ்டேஷன் தான் வருகிறது'' என்றார்.