நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடுவாலா மீது புகார் கொடுத்தார் சூரி. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் நான்காவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார் சூரி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ‛‛பலமுறை விசாரணைக்கு வந்துள்ளேன், திருப்பி திருப்பி விசாரிக்கிறார்கள். போலீஸ், நீதி துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எங்கப்பா சூட்டிங் என எனது பிள்ளைகள் கேட்பார்கள். இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு போறீங்களானு கேக்குறாங்க. கனவில் கூட போலீஸ் ஸ்டேஷன் தான் வருகிறது'' என்றார்.