ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவியாளராக இருந்தவர் அட்லி. அதன் பிறகு ராஜா ராணி, விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அட்லியின் முதல் படமான ராஜா ராணி வெளியானபோதே மௌன ராகம் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையடுத்து விஜய் நடித்த தெறி வெளியானபோது விஜயகாந்தின் சத்ரியன் படத்தை காப்பி அடித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின்னர் மெர்சல் படம் வெளியானபோது ரஜினியின் மூன்று முகம் மற்றும் கமலின் அபூர்வ சகோதரர்கள் படங்களை தழுவி எடுத்து விட்டதாக கூறப்பட்டது.
தற்போது அவர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் படமும் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி எடுத்து வருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பளார் சங்கம் அட்லியை அழைத்து அப்படத்தின் கதை குறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிவில் ஜவான் படத்தின் கதையும், பேரரசு படத்தின் கதையும் ஒன்றல்ல வெவ்வேறு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விஜய்காந்தின் பேரரசு படத்தின் கதையை திருடி ஜவான் படத்தை எடுத்து வருவதாக வெளியான புகாரில் இருந்து அட்லி தப்பித்துள்ளார் என தெரிகிறது.