நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

குற்றப் பரம்பரை உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, அண்ணாத்த உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரிஷா நடித்து வரும் தி ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வலைதளத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அதில், தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் சிலர் பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாஸ்ட்அப் மூலம் பணம் கேட்டு யாரேனும் வசூலித்தால் தயவு செய்து யாரும் அது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி.