100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
அஜித்தை பொறுத்தவரை திரையுலகைச் சேர்ந்த எந்த விதமான விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். அதேசமயம் தனது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக் பயணம் தவிர, தனது குழந்தைகள் சம்பந்தமான நிகழ்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சி என செலக்டிவான சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த சமயத்தில் தன்னை ரசிகர்களுடன் எந்த தயக்கமுமின்றி புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை அவரை ஒரு ரசிகராக எதிர்பாராதவிதமாக சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நீண்ட நாளைக்கு பிறகு அஜித்தை சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு பல வருடங்களுக்கு மனதில் போற்றி பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். சோஷியல் மீடியாவில் எப்போதுமே அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பவர்கள் என்பதால் இருதரப்பு ரசிகர்களும் இந்த சந்திப்பை வரவேற்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அஜித் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.