ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கான பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக சர்ச்சை எழுந்தது. அதைப் படமாக்கச் சென்ற செய்தியாளர்களை படக்குழுவினர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுதான் 'வாரிசு' படத்தின் ஆந்திரா, தெலங்கானா சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. அடுத்து இந்த சர்ச்சையை படக்குழுவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.