நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாளத் திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களங்களில், வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை முறைகளை படமாக எடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இவர் இயக்கிய அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் முழுவதுமே தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதுடன் முக்கால்வாசி படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.