ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பொன்னியின் செல்வனுக்கு முன், பொன்னியின் செல்வனுக்கு பின் என திரிஷாவின் திரையுலக பயணத்தை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியும், அதில் அவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவரது அடுத்த இன்னிங்ஸை மீண்டும் பரபரப்பாக துவங்கி வைத்துள்ளது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து அடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் புதிய முயற்சியாக வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் திரிஷா. இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி வரும் பிருந்தா என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ள திரிஷா, இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் தயாராகும் இந்த வெப்சீரிஸ் பின்னர் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள திரிஷா இதன் முதல் பாகம் 'ஆன் தி வெ' என்றும் கூறியுள்ளார்..