படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
ஒரே நாளில் வெளியான இரண்டு பிராந்திய மொழித் திரைப்படங்கள் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தமிழில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலைக் கடந்தது. அதே நாளில் வெளியான கன்னடப் படமான 'காந்தாரா' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 'காந்தாரா' படத்தின் வசூல் மிகப் பெரியது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்கிறார்கள். முதல் பாகத்திற்கான செலவு 100 கோடிக்கும் கூடுதலாக இருக்கலாம். அதே சமயம், 'காந்தாரா' படம் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 170 கோடி, வட இந்தியாவில் 95 கோடி, தெலுங்கில் 60 கோடி, வெளிநாடுகளில் 45 கோடி, கேரளாவில் 20 கோடி, தமிழகத்தில் 12 கோடி என இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு கன்னடப் படமான 'காந்தாரா' 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளிவந்தவை என்பது முக்கியமானது.
100 கோடி பட்ஜெட்டில் தயாரான 'கேஜிஎப் 2' படம் 1200 கோடி வரை வசூலித்தது என்கிறார்கள். இரண்டு படங்களின் லாபத்தையும் சேர்த்தால் 1500 கோடி வரும். இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வேறு எந்த மொழிப் படங்களும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இந்த இரண்டு கன்னடப் படங்களின் வசூல், லாபம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.