22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிஸியாக நடித்து வருபவர் நடிகர் பிரித்விராஜ். தற்போது இயக்குனராகவும் மாறி படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மற்ற மொழி திரைப்படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் தேடிவந்தால் மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடித்தும் வருகிறார். அந்தவகையில் தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடித்து வரும் சலார் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரித்விராஜ்.
இந்த படப்பிடிப்பு தளத்திற்கு பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனனும் விசிட் அடித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள சுப்ரியா மேனன், “இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பிரசாந்த் நீல் படப்பிடிப்பு தளத்தில் அவர் பணிபுரிவதை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த படத்தை அவர் உருவாக்குவதை பார்க்கும்போது இன்னும் பல சாதனைகளை இந்த படம் தகர்க்கும் என தெரிகிறது. உங்களுடைய எண்ணங்களை பார்வையை அழகாக திரையில் கடத்தும் அந்த வித்தையை பார்ப்பதற்கே ஆனந்தமாக இருந்தது” என்று இயக்குனர் பிரசாந்த் நீல் குறித்து சிலாகித்து கூறியுள்ளார் சுப்ரியா மேனன்.