நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஆண்டுதோறும் ரீயூனியன் என்கிற பெயரில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக கோலோச்சிய நடிகர், நடிகைகள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில்கூட இவர்களது சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாகா மார்டின் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் கெட் டு கெதர் என்கிற பெயரில் ஒன்றுகூடி ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இளம் நடிகைகள் கொண்டாட்டத்திற்கு முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர் கல்யாணியின் அம்மாவான சீனியர் நடிகை லிசி தான். இந்த சந்திப்பில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.