நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த சன்னி லியோன். தற்போது தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். தீ இவன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.
சினிமாவில் நடிப்பது தவிர மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார். அதன்படி கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட ஒத்துக் கொண்டு 20 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் சன்னி லியோன். அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதற்கு காரணம் சன்னி லியோன்தான் என்றும் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் மீது கேரள உயர்நீதி மன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.




