நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2014ம் ஆண்டு வெளியான அப்புச்சி கிராமம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் வி.ஐ.ஆனந்த். அதன்பிறகு தமிழில் படம் இயக்கவில்லை. தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு சந்தீப் கிஷன் நடித்த டைகர், நிகில் சித்தார்த்தா நடித்த எக்கடிக்கு போதாவு சின்னவாடா, அல்லு சிரிஷ் நடித்த ஒக்க ஷணம், ரவிதேஜா நடித்த டிஸ்கோ ராஜா படங்களை இயக்கினார்.
தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் 'ஊரு பேரு பைரவகோனா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில காவ்யா தாப்பர், வர்ஷா பொல்லம்மா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ், ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. சூப்பர் நேச்சுரல் பேன்டஸி படமாக பெரிய பட்ஜெட்டில் இது உருவாகிறது. தெலுங்குடன் சேர்த்து தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஆனந்த்.