39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
பெங்களூரை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் திருந்தவில்லை அங்கிருந்தபடியே, தொழிலதிபர்களை மிரட்டி 200 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி வழக்கில் சுகேஷுக்கு வெளியில் இருந்து உதவியதாக நடிகை ஜாக்குலின் பெர்ணாடஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பிறகு சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது. சுகேசும் ஜாக்குலின் எனது காதலிதான், ஆனால் அவருக்கும் மோசடிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
என்றாலும் அமலாக்கத்துறை ஜாக்குலினை பல கட்டமாக விசாரித்து குற்றவாளி பட்டியலில் இணைத்தது. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகை ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரிடம் அதிகளவில் பணம் இருப்பதால், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் என்று நீதிமன்றத்தில் கூறியது.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 50 ஆயிரத்துக்கான பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கான தனிநபர் உத்தரவாதமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.