மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் அதாவது நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் தற்போது ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 12 படங்களுக்கு இசையமைத்து வருவதாக கூறியுள்ளார் கோபி சுந்தர். ஆனால் இதில் ஒன்று கூட மலையாள படம் இல்லை.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் மலையாள படத்தில் இசை அமைப்பதில்லை என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோபி சுந்தர், “உங்களுக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட சிறப்பான சம்பளம் கொடுப்பதாக கூறி இன்னொரு இடத்திற்கு அழைத்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் சகோதரரே..? அதைத்தான் நானும் எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடிக்கு மிகப்பெரிய புகழை கொடுத்த கீதா கோவிந்தம் படத்திற்கு இசையமைத்தது இவர்தான்.. ஆனாலும் சம்பளம் காரணமாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியுள்ளதாக இவர் கூறியது ரசிகர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.