நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரும், 'ஆர்ஆர்ஆர்' படக் கதாநாயகியுமான ஆலியா பட் பத்து நாட்களுக்கு முன்பு நவம்பர் 6ம் தேதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். அவருக்கும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. ஜுன் மாதத்தில் ஆலியா தாய்மை அடைந்திருப்பதாக ரன்பீர் கபூர் அறிவித்தார்.
திருணமாகி, தாய்மை அடைந்த பின்னும் ஆலியா பட் அவர் நடித்து வெளிவந்த படங்களான 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' ஆகிய படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த 'பிரம்மாஸ்திரா' படம் பெரிய வெற்றி பெற்றது.
குழந்தை பெற்ற பின் கடந்த பத்து நாட்களாக தனது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் எதையும் பகிராமல் இருந்தார். நேற்று அவருடைய உருவம் சரியாகத் தெரியாத அளவுக்கு 'அவுட் ஆப் போகஸ்' செய்து, கையில் 'மம்மா' என்று எழுதியிருந்த காபி கோப்பைக்கு போகஸ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் லைக் செய்த, அந்த புகைப்படத்திற்குக் கூட 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.