கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் |
நடிகர் ஷாருக்கான் வெளிநாட்டு விமான நிலையங்களில் ஓரிருமுறை விசாரணை மற்றும் சோதனை என்கிற பெயரில் காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் என்கிற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேசமயம் நேற்று முன்தினம் துபாயிலிருந்து தனது குழுவினருடன் மும்பை விமான நிலையம் வந்திறங்கிய ஷாருக்கான் சுங்க அதிகாரிகளால் ஒருமணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டார். காரணம் ஷாருக்கானுடன் பயணித்தவர்களில் அவரது பாதுகாவலரான ரவிசங்கர் சிங் என்பவர் கொண்டுவந்த லக்கேஜில் 17.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்தன. அதற்கான சுங்கவரி செலுத்தப்படவில்லை.
அதேசமயம் இவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதால் அந்த சமயத்தில் சுங்க வரி செலுத்தும் கவுன்ட்டர்கள் செயல்படாமல் மூடியிருந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமான நிலையில் ஷாருக்கானின் பாதுகாவலர் தவிர மற்ற 5 பேரையும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதிகாலையில் கவுன்ட்டர்கள் செயல்பட துவங்கிய பின்னர் சுங்க வரியாக சுமார் 6.88 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு ஷாருக்கானின் பாதுகாவலர் ரவிசங்கர் சிங் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.