திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரித்திகா சிங், தற்போது துல்கர் சல்மான் நடித்துவரும் கிங் ஆப் கோதா என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் அவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே நடனமாடுகிறார். கடந்த சில நாட்களாக இந்தப் பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக இந்த சிறப்பு பாடலுக்கு சமந்தாவை ஆட வைக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபநாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திட்டத்தை மாற்றி அவருக்கு பதிலாக ரித்திகா சிங்கை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர்.