நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் கார்த்தி. தொடர்ந்து 'விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்' என வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் கார்த்தி.
அவருடைய பேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் 'ஹேக்' செய்துள்ளார்கள். அது குறித்து டுவிட்டரில், “ஹலோ நண்பர்களே, என்னுடைய முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் குழுவுடன் அதை மீட்கும் முயற்சியில் இருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் 3.9 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள கார்த்தியின் முகநூல் பக்கத்தில் கடைசியாக சில மணி நேரங்களுக்கு முன்பு 'கார்த்தி' எனக் குறிப்பிட்டு கேம் வீடியோ ஒன்றை யாரோ பதிவிட்டிருக்கிறார்கள்.
பிரபலங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அடிக்கடி சிலர் ஹேக் செய்து வருகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பதில்லை. பிரபலங்களாக இருந்தாலும் சமூக வலைத்தளப் பக்கங்கள் பாதுகாப்பற்றதாகத்தான் உள்ளது.