இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்திற்கு எப்படியும் ஆஸ்கர் விருதுகளை வாங்க வேண்டும் என படத்தை அமெரிக்காவில் திரையிட்டு, அங்கு அதற்கான புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி. இடையில் ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு நடந்த பட வெளியீட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டுவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு சிகாகோவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுகையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். படத்திற்கான கதை விவாதம் நடந்து வருவதாகக் கூறியுள்ளார். கதை எழுதும் பணியில் தனது அப்பா விஜயேந்திர பிரசாத் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'பாகுபலி 2'ம் பாகம் முதல் பாகத்தை விட அதிகம் வசூலித்தது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக உருவாக்கி இரு மடங்கு வசூலைப் பெறவும் வாய்ப்புள்ளது.