இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ், தெலுங்கில் தனி கதாநாயகிகளாக ஒரு சில நடிகைகள்தான் நடித்து வருகிறார்கள். அதிலும் சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும்தான் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் தனி கதாநாயகியாக நடித்தாலும் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. தெலுங்கில் அப்படி தனி கதாநாயகிகளின் படங்கள் அதிகம் வருவதில்லை.
சமந்தா நடித்து தெலுங்கில் தயாரான 'யசோதா' படம் தமிழிலும் டப்பிங் ஆகி இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. புதிய கதைக்களம், சமந்தா கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ், அவரது நடிப்பு என படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஒரு படமாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டாலும் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்துள்ளன. அதே சமயம், ஆந்திரா, தெலுங்கானாவில் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபீசில் படம் வெற்றி பெற்றுவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
சமந்தா தனி கதாநாயகியாக நடித்த முதல் படமான 'யு டர்ன்' தமிழ், தெலுங்கில் இரு மொழிப் படமாக வெளிவந்தாலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து அவர் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஓ பேபி' வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சமந்தா மீண்டும் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள 'யசோதா' படமும் வெற்றிப் படமாக அமைய உள்ளது.