ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி கவனம் பெறாமல் சென்ற படம் ராதா கிருஷ்ணா. குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் உருவாகி இருந்த இந்த படம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படததால் பெரிதாக பேசப்படவில்லை.
சிறுவன் கிருஷ்ணா (ஆதித்யா), யானை (ராதா) இருவரும் உடன்பிறவா சகோதரர்களாக வளர்கிறார்கள். பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் வனத்துறையினர் யானையை அழைத்துச் செல்கிறார்கள். கிருஷ்ணா தனது சகோதரனும் நண்பனுமாகிய யானையை நினைத்து மிகவும் ஏங்குகிறான். பின்னர் யானையை தேடி காட்டுக்குள் தன்னந்தனியே பயணத்தை மேற்கொள்கிறான். ராதாவும் கிருஷ்ணனும் மீண்டும் சந்திக்கிறார்களா என்பதே கதையின் முடிவு.
அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அழகான இயற்கை காட்சிகள், காட்டுக்குள் வரும் பிரச்சினைகளை காட்டி இருந்தது. புகழ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நாளை ( நவம்பர் 13) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில், தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.