ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

எண்பதுகளில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட ஜோடியாக ரஜினிகாந்த் - ராதா ஜோடி முன்னணியில் இருந்தது. கிட்டத்தட்ட 7 படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். பெரும்பாலும் எல்லா படங்களுமே வெற்றிப்படங்கள் தான். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தான் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததும் அதை படமாக்கினால் அதில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பியதாக கூறினார். மேலும் கமல் - அருள்மொழி வர்மன் ஆகவும், ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த், பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ், நந்தினியாக ஹிந்தி நடிகை ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி, பூங்குழலியாக ராதா ஆகியோர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில் படம் வெளியாகி தற்போது அதன் வெற்றி விழாவையும் சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் அப்போது பேசிய அந்த பேச்சை ராதா இப்போதுதான் கேட்டிருப்பார் போல தெரிகிறது.. இதைத்தொடர்ந்து ராதா தற்போது இந்த மிகப்பெரிய நாவலில் பூங்குழலி கதாபாத்திரத்திற்காக தன்னை பொருத்தி பார்த்ததற்காக ரஜினிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.